Tuesday, 10 February 2009

காதல் சதுரங்கத்தில்

...............................................................................................................

தோல்வி இல்லை.....
காதல் சதுரங்கத்தில்
நான்
வெற்றிபெற வேண்டும்
என்று
நீ காய்
நகர்த்துவதும்
நீ
வெற்றிபெற வேண்டும்
என்று
நான் காய் நகர்த்துவதும்
இறுதியில்
இருவரும் வெல்வது....

...........................................................................................................................................

குத்திக்கொல்லும் சொல் தவிர்

..................................................................................................
குத்திக்கொல்லும்

சொல் தவிர்கோடி கோடியாய்

தங்கம் கொட்டினால் கூட

சமனாகாது குத்திக் கொல்லும்

வார்த்தைகட்கு

முள்ளிலம் (முள்ளின் மேல்)

உறங்கலாம் கல்லிலும்

உறங்கலாம் - ஆனால்

குத்திக்கொல்லும் சொல்லின்

மேலல்ல

அருகிலே கூட உறங்கமுடியாது.
...................................................................................................................................................

காதலை நேசி

....................................................................................................................................................
காதலை நேசி
காதலையும் நேசிக்கக்
கற்றுக்கொள்
காதல்... தேர்தலில்
வெற்றி பெறுவதற்கல்ல
காதல்.... போரில்
துன்பத்திலும் துணைநிற்க
காதலில் கட்சி மாறுவது
கபடித்தனம்..
காதலில் கடைசிவரை வாழ்
துன்பத்தில் நீ கட்சி
தாவிக்கொள்வாயாயின் - உன்
புதிய கட்சிக்கும்
துன்பம்???
...............................................................................................................................................................................

Monday, 9 February 2009

காதல் இதுதான்.......

.................................................................................................................................................................................................................................




காதலில் வேராய்
இரு நீ வருட்சமாயின்
நான் அதன் வேராவேன்
இருவர்க்கும் இது வேதம்....
உன் இலைகள் உதிரும்போது...
நான் உனக்கு
உயிர்கொடுப்பேன்...
வேராகி
இலை போன்று...
இடைநடுவில்
இன்பம் தீர்ந்து போகையில்
இடறிச் செல்லேன்
உயிருள்ளவரை
உன்னோடு....



ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வீட்டுக்குக் குடிவந்து புதிதில் ஒரு மரத்தடுப்பில் ஒரே ஒரு ஆணி அடித்திருந்தார் ஒருவர். சிலமாதங்களுக்குப் பின்பு அந்த மரத்தடுப்பின் பின்புறம் பார்க்கும் சந்தர்ப்பம் தவறுதலாகக் கிடைத்தது அப்போது அதிர்ந்து போனார். அந்த தடுப்பில் பின்னால் ஒரு பல்லியின் காலில் ஆணி ஏறியிருந்தது. எங்கும் நகராமல் இத்தனை காலம் இந்தப் பல்லி எப்படி உயிர்வாழ்கிறது? சிறிது நேரம் கவனித்தார்.
எங்கிருந்தோ ஒரு பல்லி வந்து அதன் வாயிலிருந்து உணவை தன் யோடிப்பல்லியான மேற்படி பல்லிக்கு ஊட்டியது. மனிதர்களாயின் என்னை நிம்மதியாக விடு....மீண்டு வரமுடியின் வா.....உன்னை நீயே காப்பாற்ற உனக்கு தெரியாதா....