Wednesday, 11 March 2009

உள்ளமும்

........................................................................................................................................................

உடல்களின் தழுவல்



காதலல்ல



உள்ளமும்



உடலும் உறைகின்ற உவகை



*********அது



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.................



பொதுவாக பெண்களின் வாலிப வயது நாற்பத்து ஐந்துஎன்றே கூறவேண்டும் இதன் பின் இவர்களின் உடல்தொழிலியல் செயற்பாடுகள் ஒர்மோன் அளவு குறைவதால் இனப்பெருக்க சுவட்டிலும் மற்றம்கள் ஏற்படுவதால் இவர்களின் வாலிபம் பெரிதும் எல்லைப்படுத்தபடுகிறது இதன் பின் இவர்கள்... தமது வாழ்க்கைக்காலத்தின் பெரும் பகுதியை கழிப்பதற்கு விசுவாசமான துணையை தேட வேண்டிய தேவை ஏற்படுகிறது அதாவது ஒரு பெண்ணின் வாழ்க்கைகாலத்தின் பெரும் பகுதி அன்பை அடிப்படையாகக்கொண்டு அமையவேண்டி உள்ளது


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பெண்கள் இவ்வயதை அண்மிக்கையில் அவர்களின் மாதவிடாய்ச்சக்கரம் நின்றுவிடுகிறது. இதன் பின் இவர் உடல், உள ரீதியாக பல அசௌகரியங்களை உணர ஆரம்பிக்கின்றார்கள். இது போஸ்ட் மெனோபோசல் சின்றோம் எனப்படும்.


உளரீதியாக,


• ###பதற்றமடையும் தன்மை


.###மனதில் ஆறுதலின்மை


• ### தூக்கமின்மை


• ### எதிலும் கவனம் செலுத்த முடியாமை


• ### மணதளர்ச்சி


• ### இலகுவில் சினமுறல்


.###நெருக்கீட்டு தாக்கங்கள்
உடல்ரீதியாக,


• ### அதிக களைப்பு, மூச்செறிதல்


•### உடல் நிறை அதிகரித்தல்


• ### உடல் உஷ்ணமாகி இருத்தல் அத்துடன் சிலருக்கு எரிவு இருப்பதாக உணர்தல்


பாலியல் ரீதியாக


.###பெண் உறுப்பின் நெகிழ்தன்மையை குன்றல், வரட்சியடைதல் போன்றவற்றுடன்


.###உடலுறவிற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் போன்றன ஏற்படுகின்றன.


.....................................................................................................................

காதல் இனிதே....

...................................................................................................
காதல் இனிதே....
காமத்தின்
தீயில்
உடல்களை இணைத்துக்கொள்ளும்
மேலைத்தேய வாழ்க்கையில்
அர்த்தம் யாதுமில்....
காதலின் கதகதப்பை கற்றுக்கொள்.....

........................................................................................................................................

Tuesday, 10 March 2009

காதல் ருசி.....

...................................................................................................................
காதல் .....
யாருமற்ற ஒரு புல்வெளியில்
காதலியின் அரவணைப்பு...
இலட்சம் படைவீரர் கொண்டு
காவல் செய்த
உயர் பாதுகாப்பு வலயம்.....
மனதில்......





காமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற காதல் ஆகாயத்தில் உலாவும் முகில் கூட்டம் போன்றதாகவே இருக்கும். எனினும் அன்பை அடிப்படையாகக் கொண்ட காதல் மிகவும் உறுதியான அத்திவாரத்தை கொண்டதாக அமையும் தொடர்ந்து நிலைக்கும் உயிருள்ளவரை அல்ல.... உலகம் வாழும் வரை.


..................................................................................................................................................................

காதலின் பரிசு.........

..................................................................................
காதலின் பரிசு.........

ஆதாம் ஏவாள்

காலம் தொட்டு
ஆடை கட்டி மறைத்து
அந்த இரகசியத்தை –

அன்பே உன்னை

மனதார நம்பி

உளமாரப் பகிர்கிறேன்.

உண்மைக் காதல்

உள்ளங்கள் தம்முள்

பரிமாறிக்கொள்ளும்

அன்புப்பரிசு – காமம்




நம்பிக்கை விசுவாசத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும் காமமானது காதலிற்கோர் மிகை நிரப்பியாகும் - எனினும் காமம் மட்டும் தனியே பிரித்தெடுத்துப் பரிமாறப் பழகிக் கொண்டதால் நம்பிக்கை விசுவாசம் என்பன யாவும் தகர்ந்து போர்விட்ட உண்மைத் தன்மையற்ற உறவுகளைக் கொண்ட குடும்பம் அல்லாத அன்னிய கலாச்சாரத்தின் விசவிதைகள் நம் மண்ணிலும் தளைவிட ஆரம்பிக்கின்றது.


.....................................................................................................................................................

காதலித்துப்பார், வாழ்வெல்லாம்

............................................................................
வாலிபம்........ வாழ்வல்ல.....
காமத்தை
காதல் என்று
கனவில்கூட நினையாதே
காமம் வேறு காதல் அல்ல
காதல் ஒன்றும் அரசியலல்ல
சின்னவொரு காரணத்துக்காய்
சிறகடித்துப் பறப்பதற்கு
உன் வாலிபம்
உள்ளவரை தான் (காமத்தின்)
உன்சிறகுகள் விரியும்
வாலிபம் தீர்ந்த பின் - நீ
எண்ணும் வசந்தகாலம் ஓய்ந்திவிடும்

காதலித்துப்பார்,

வாழ்வெல்லாம் வசந்தம்

தினந்தோறும் தளிர்விடும்.....

முதுமையிலும்முந்நூறு ஆண்டு இளமை வரும்...

.........................................................................................................................................................

மேலைத்தேய பாணியிலான வாழ்க்கை முறையானது பெண்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எல்லைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. பெண்களின் பாலியல் தொடர்பான உடல் தொழிற்பாடுகள் நாற்பத்தைந்து வயதை அண்மித்த காலங்களில் எல்லைப்படுத்தப்படுகின்றது. இதனால் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆண்துணையை தேடும் மேலைத்தேய பாணி வாழ்க்கை முற்றுப்புள்ளியை நோக்கி நகர்வதுடன் இவ்வயது எல்லையின் பின் அவர்கள் தமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய துணையையே எதிர்பார்க்க தொடங்குகின்றார்கள். இவர்களை கவனிக்க குழந்தைகள் கூட இல்லாத நிலையிலும் இவ்வாழ்க்கை முறைக்கு பழகிப்போன ஆண்கள் இனம் யுவதிகளை நாடுவதாலும் இவ்வாழ்க்கை முறையில் வாழ்ந்த பெண்கள் குறிப்பிட்ட வயதெல்லையின் பின் தாமாகவே அனாதைகளாக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதற்கு எந்த அரசிடமும் உருப்படியான திட்டம் இல்லாததால் மிகக்கொடிய வறுமையிலும் விரக்தியிலும் மீதி வாழ்வில் உழல்கின்றார்கள்.

Monday, 9 March 2009

அன்பு -உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

........................................................................................

அன்பு -########

உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

உலகம் விரைகிறது

மனித மூளை தடம் மாறுகிறது

பணத்தை எண்ணி

சிந்தை எரிகிறது

எண்ணம் செயல்

எல்லாம் எங்கோ தொலைகிறது

நிம்மதி நிற்காது ஓடுகிறது

மதி மயங்கி

மது கிண்ணம் தன்னில்மனிதன்

வீழ்கிறான்

அன்பை உள்ளத்தில் அல்ல

உதடுகளில் கூட காண முடியவில்லையே இந்த

புதிய உலகில்

காதல் -உலகில் அர்த்தம் மறந்த சொல் .........அறிவு மிக்க உலகுக்கு உண்மையில் அர்த்தம் தெரியாத சொல்..... அது காதல்

#####காமம் - உலகம் அதைத்தான் காதல் என்கிறது #####

.............................................................................................................................

எதிர்வாதம் செய்து ..படுதோல்வியே

................................................................................................

பொதுவாக... காதலர்கள் சிலவிடயங்களில் வெல்வதாக எண்ணிக்கொண்டு தமது உச்சவலுவைச் செலவிட்டு எதிர்வாதம் செய்வதால்.. பொதுவாக பெண்களே இந்த நிலையைக்குரியவர்கள். குறிப்பிட்ட விடயத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றும் ஆண்களின் மனதிலிருந்து மிக மிகத் தூரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தான் காதல் இரசாயனம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டு பிரிந்து கொள்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் விட்டுக்கொடுப்பின்மையேயாகும். எதிர்வாதம் செய்து வெல்வது குறிப்பிட்ட விடயத்தில் மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் அவர்கட்கு படுதோல்வியே ஏற்படுகின்றது.

...........................................................................................................

கோபம் தவிர்....

....................................................................................

கோபம் தவிர்....வாலிப வயதில் காதலி கோபத்தை ரசிப்பது வழமை. 'மெல்லிய ஆண் மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது – முரடா உன்னை ரசித்தேன்' என்பது போலத்தான். இன்னும், 'கோபப்படுவதும் ஒரு தனிக்கலைதான்' என்று செல்லமாக சலித்துக்கொள்கின்ற சினேகிதியை நம்பிக் கோபத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் திருமணத்தின் பின் அவரே சரியான சுடுதண்ணி எங்க வீட்டுக்காரர் என்று கவிழ்த்துவிடுவார்கள்.

...............................................................................................................................................................................

வாழ்வு அர்த்தப்படும்....

.................................................................................................................

காதல் இராஜதந்திரத்தில்

ஊடலில் தோற்றவர்

காதலில் வென்றவராவார்

தோற்றால் ஒன்றும்

குறையாது தோல்வியல்ல

அது வெ..ற்...றி அன்பை

வழங்கு அள்ளி எதுவுமே

குறையாது....காதலி..... காதலி.....

ஒன்றும் குறையாது – அப்போது

வாழ்வு அர்த்தப்படும்.......................

...........................................................................................................................................

காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.

...............................................................................

காதல் இருந்தால்.....
உன் வசந்த காலத்தில் - காமம்
பூப்பூக்கின்றது உன்
இலையுதிர் காலத்திலும் உன்னை
இறவாது காத்து நீரூற்றுகிறது
காதல் என்னும் வேர்.....





ஒர் தீவில் காதல், காமம், செல்வம், அழகு என்பன இருந்தன. ஒருநாள் அத்தீவு மூழ்கிவிடும் என்று எண்ணி படகுகளைத் தயார் செய்துகொண்டு இவை புறப்பட்டன. காதலிடம் படகில்லை செல்வத்திடம் கேட்டபோது என்னிடம் தங்கம் வெள்ளி இருக்கிறது உன்னைக் கூட்டிச்செல்ல முடியாதென்றது, அழகிடம் கேட்டபோது நீ ஈரமானவள் உன்னால் என் அழகு போய்விடும் என்றது. காமத்திடம் கேட்டபோது அதன் காதில் எதுவும் விழவில்லை கடைசியில் ஒரு படகு காதலின் அருகில் வந்து நின்றது ஏறு என்றது? அதனிடம் காதல் நீ யார்? ஏன் இவ்வளவு கரிசனை என்றது அதற்கு படகு நான்தான் காலம் என்றது. காதலின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.

பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

........................................................................................................

இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன. யாருக்கு மற்றவர் மீது காதல் அதிகம் என்பதில் இருவர்க்கும் போட்டி. ஒரு தடாகத்திலிருந்து தாமரையைக் காட்டி "நாளை காலை யார் இதன்மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் காதல் அதிகம்" என்று தீர்மானித்தன மறுநாள் காலை தாமரை மலர்வதற்கு முன்பாகவே 'படபட' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது. தாமரை மலர்ந்து அடுத்த வினாடி அதில் அமர்ந்தது அதிர்ந்துபோனது தாமரைக்குள்ளேயே பெண்பூச்சி செத்துக்கிடந்தது. (தன் அன்பை உணர்த்தி முதல்நாள் மாலையே வந்து அமர்ந்து கொண்ட அந்த பட்டாம்பூச்சி தாமரை மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தது. அந்த பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

உண்மைக் காதல்.....

.............................................................................................................................


காதலில்....
பூ வண்டு
திணைபேதம்
கிடையாது
இருவரும் பூவாய்
ஒரு செடியில்
ஒன்றாய் மலர்ந்து
ஒருவர் முகம் பார்த்து
ஒன்றாய் மடிவது.
................................................................................................................................